/ 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் அடியானாவேன், எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்'...

'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் அடியானாவேன், எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் அடியானாவேன், எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்'.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

கிறிஸ்தவர்கள் ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு செய்தது போல், ஷரீஆ வரைமுறையை மீறி தன்னை அளவு கடந்து புகழ்வதையும், அல்லாஹ்வின் பண்புகள், மற்றும் அவனுக்கே உரித்தான விஷேட செயல்களைக் கொண்டு வர்ணிப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்தார்கள், அதே போன்று நபியவர்கள் மறைவானவற்றை அறிகிறார் என்று கருதுவது, அல்லது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களிடம் பிரார்த்திப்பது போன்ற விடயங்களையும் இந்த ஹதீஸில் தடுத்துள்ளார்கள். பின்னர் அவர்கள் தான் யார் என்பதை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். தான் அல்லாஹ்வின் அடியார்களில் ஒவருன், என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று அழைக்குமாறு பணிக்கிறார்கள்.

Hadeeth benefits

  1. புகழ்தல் மற்றும் மகிமைப்படுத்துதல்; ஆகிய விடயங்களில் ஷரீஆ வரையரையை மீறி செல்வதானது இணைவைப்பிற்கு வழிவகுக்கும் என்பதினால் கண்டிக்கப்பட்டிருத்தல்.
  2. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்த இந்த விடயம் எமது முஸ்லிம் சமூகத்தில் நிகழ்ந்து விட்டது. இதன் விளைவாக ஒரு பிரிவினர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிலும், இன்னொரு பிரிவினர் அஹ்லுல் பைத்தினரிலும், மற்றொரு பிரிவினர் அவ்லியாக்களிலும் அளவுகடந்து சென்றதினால் இணைவைப்பில் வீழ்ந்துள்ளனர்.
  3. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை அல்லாஹ்வின் அடியான் என வர்ணித்திருப்பது தான் அல்லாஹ்வால் இரட்சிக்கப்படுபவர் என்பதை தெளிவுபடுத்தவேயாகும். ஆகவே இரட்சகனின் பிரத்தியேக பண்புகளில் ஏதாவது ஒன்றை அவர்களுக்கு கற்பிப்பது கூடாது.
  4. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை அல்லாஹ்வின் தூதர் என வர்ணித்திருப்பது தான் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதை தெளிவுபடுத்துவதேயாகும். ஆகவே அவர்களை உண்மைப்படுத்தி அவர்களை பின்பற்றுவது கடமையாகும்.