- தஷஹ்ஹுத் அமர்வின் இடம் ஓவ்வொரு தொழுகையினதும் இறுதி ஸஜ்தாவின் பின்னராகும். அதாவது இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையில் இரண்டாம் ரக்அத்தின் இரண்டாம் ஸஜ்தாவின் பின்னரும், மூன்று, அல்லது நான்கு ரக்அத் கொண்ட தொழுகைகளில் இரண்டாம் ரக்அத்திற்குப் பின்னரும், இறுதியிலும் ஆகும்.
- தஷஹ்ஹுத் அமர்வில் அத்தஹிய்யாத் ஓதுவது வாஜிபாகும். நபியவர்களிடமிருந்து உறுதிப் படுத்தப்பட்ட தஷஹ்ஹுத் வார்த்தைகளில் ஏதாவது ஒன்றை கூறுவது அனுமதிக்கப்பட்டதாகும்.
- பாவகாரியங்களல்லாத, தமக்கு விருப்பமான துஆவை தொழுகையில் ஓதுவது அனுமதிக்கப்பட்டதாகும்.
- பிரார்த்தனையில் முதலில் தமக்காக பிரார்த்திப்பது வரவேற்கத்தக்கது.