- நபியரவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகும். அவர்களுக்கு மாறு செயவது அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாகும்
- நபியவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களுக்கு மாறுசெய்வது நரகத்தைப் பெற்றுத் தரும்.
- இந்த சமூகத்தில் உள்ளவர்களில் இறைத்தூதருக்கு கட்டுப்படுவோருக்கான நற்செய்தி குறிப்பிடப் பட்டுள்ளமை. அதாவது அவர்களி;ல் அல்லாஹ் வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து நடக்காதோர் அனைவரும் சுவர்க்கம் செல்வர்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது உம்மத்தின் மீது கொண்டிருந்த பாசத்தையும், அவர்களை நேர்வழிப்படுத்துவதில் அவர்களுக்கிருந்த அவாவையும் இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.