- நற்செயல்கள் அதற்குரிய சிறப்புகளில் வேறுபடுவது போல், பாவங்களும் அதன் வீரியத்தில்- கனதியில்-வேறுபடுகின்றன.
- பாவங்களில் மிகப் பெரியது அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பின் தன்னுடன் உணவுண்பதைப் பயந்து பிள்ளையைக் கொலைசெய்தல், பின் அண்டைவீட்டுக்காரரின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது என்பதை இந்நபிமொழி குறிப்பிடுகிறது.
- வாழ்வாதாரம் அல்லாஹ்வின் கையில் உள்ளது. உயிரினங்கள் அனைத்தினதும் வாழ்வாதாரத்தை அவனே பொறுப்பேற்றுள்ளான்.
- அண்டை வீட்டாரின் உரிமையின் மகத்துவம் குறிப்பிடப்பட்டிருத்தல் அவருக்கு நோவினை செய்வது பிறருக்கு நோவினை செய்வதை விட மிகவும் கனதியானது.
- படைப்பாளன் மாத்திரமே வணங்கி வழிபட தகுதியானவன். அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை.