- கூட்டுத் தொழுகை –ஜமாஅத் தொழுகை- கடமையாகும். காரணம் சலுகை என்பது கடமையான ஒரு விடயத்திற்காகவன்றி வேறு எதற்கும் கிடையாது.
- நபியவர்கள் அதான் சப்தத்தைக் கேட்வபருக்கு 'ஃபஅஜிப்' அதாவது பதிலளிப்பீராக என வேண்டிக் கொண்டது ஜமாஅத் தொழுகை வாஜிப் -கடமை என்பதை காட்டுகிறது. அடிப்டையில் மார்க்க விவகாரம் சம்பந்தமாக ஏவல் வினையைப் பயன்படுத்தி ஒன்றைக் குறிப்பிட்டால் அது கடமை என்பதைக் காட்டும்.