- அலி இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு குறித்துக்காட்டப்பட்டிருத்தல். அதாவது வெட்கமானது இன்னொருவர் மூலமாவது கேள்வி கேட்பதை விட்டும் அவரைத் தடுக்கவில்லை.
- பத்வா- மார்க்கத்தீர்ப்பை கோருவதில் ஒருவரை பதிலாக நியமிப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.
- ஒருவர், நலன் கருதி தான் வெட்கப்படுவதைக் குறித்து இன்னொருவரிடம் கூறுவது அனுமதிக்கப்ட்டதாகும்.
- இச்சை நீர் அசுத்தமாகும். எனவே உடம்பில் மற்றும் ஆடையில் பட்டால் அதனை கழுவுவது வாஜிபாகும்.
- மதி வெளியாகுவது வுழுவை முறிக்கும் காரியங்களுள் ஒன்றாகும்.
- ஆண்குறியுடன், இரு விதைகளையும் கழுவுவது வாஜிபாகும். இதற்கான ஆதாரம் வேறொரு ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.