- அல்லாஹ்வின் தூதர்களின் இயற்கை மரபுகளை -வழிமுறைகளை அல்லாஹ் விரும்பி வரவேற்போதோடு அவற்றை கடைப்பிடித்து ஒழுகுமாறும் கட்டளையிடுகிறான். அவை யாவும் முழுமை, தூய்மை, அழகு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.
- இயற்கை மரபுகளில் அலட்சியம் கொள்ளாது பேணிநடப்பது மார்க்கம் வழிகாட்டிய விடயமாகும்.
- இவ்விடயங்களைக் கடைபிடிப்பதால் பலவிதமான ஆன்மீக, லௌகீக பயன்பாடுகள் உள்ளன. அழகிய தோற்றம், உடற்சுத்தம், ஆன்மீக சுத்தத்திற்கான பேணுதல், நிராகரிப்பாளர்களின் கலாச்சாரத்திற்கு மாறுசெய்தல், இறைக்கட்டளையை எடுத்து நடத்தல் போன்றன அவற்றுள் சிலதாகும்.
- வேறு அறிவிப்புகளில் -ஹதீஸ்களில்- இங்கே குறிப்பிடப்பட்ட ஐந்து விடயங்களுக்கு மேலதிகமாக தாடி வளர்த்தல், மிஸ்வாக் செய்தல் போன்ற இவை அல்லாத பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.