- மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு பரிந்துரை உண்டு என்பதை உறுதிப்படுத்தல். அது தூய்மையான ஏகத்துவவாதிகளுக்கு மாத்திரமே உண்டு.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை (ஷபாஅத்) என்பது ஏகத்துவவாதிகளில் நரகத்திற்குரியோர் அதில் நுழையாது இருப்பதற்கும், நுழைந்தோர் அதிலிருந்து வெளிவருவதற்குமான முறையீட்டைக் குறிக்கும்.
- அல்லாஹ்வுக்கென்ற தூய்மையான உள்ளத்துடன் மொழிந்த ஏகத்துவ வார்த்தையின் சிறப்பும், அதன் பாரிய தாக்கமும்.
- திருக்கலிமாவை -ஏகத்துவ வார்த்தையை- உண்மைப்பத்துவதென்பது அதன் கருத்தை அறிந்து அதற்கேற்ப செயற்படுவதாகும்.
- அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பும், அறிவின் மீதான அவரின் பேரார்வமும்.