நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்கூலி)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்! என்று பதிலளித்தார்கள்...
ஹகீம் இப்னு ஹிஸாம் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: 'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு 'தர்மம் செய்தல், உறவினரைச் சேர்(ந்து வாழ்)தல்' போன்ற நல்ல காரியங்களைச் செய்துள்ளேன். அவற்றிக்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?' என கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்கூலி)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்! என்று பதிலளித்தார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
விளக்கம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு காபிர் தான் இஸ்லாத்தைத் தழுவமுன் செய்த நற்காரியங்களான தர்மம் அல்லது அடிமையை உரிமையிடல் அல்லது உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்ற விடயங்களுக்காக அவர் இஸ்லாத்தைத் தழுவிய பின் அவருக்கு கூலி வழங்கப்படும் என தெளிவுபடுத்துகிறார்கள்.
Hadeeth benefits
காபிர்-இஸ்லாத்தை ஏற்காதவர்- இறைவனை ஏற்காத நிலையில் மரணித்தால் இவ்வுலகில் அவர் செய்த நற்காரியங்களுக்காக மறுமையில் கூலி-வெகுமதி- வழங்கப்படமாட்டாது.
Share
Use the QR code to easily share the message of Islam with others