- 'லாஇலாஹ இல்லல்லாஹு' என மொழிவதும், அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் நிராகரிப்பதும் இஸ்லாத்தினுள் நுழைவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.
- 'லாஇலாஹ இல்லல்லாஹு' என்பதன் கருத்து அல்லாஹ்வைத் தவிர கற்சிலைகள், மண்ணறைகள் ஆகியவற்றை வணங்குவதை நிராகரித்து வணக்க வாழிபாடுகளில் அவனை ஓருமைப்படுத்தல்.
- யார் தவ்ஹீதை –ஏகத்துவக்கொள்கையை - ஏற்று அதன் வெளிப்படையான சட்டதிட்டங்களை கடைப்பிடித்தொழுகி நடந்து, அவனிடமிருந்து ஏகத்துவத்திற்கு முரணான விடயங்கள் வெளிப்படாத வரையில் அவனின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை விட்டும் தடுப்பது கடமையாகும் .
- ஒரு முஸ்லிமின் உடமை, உயிர் புனிதமானது, தகுந்த காரணமின்றி அதற்கு சேதம் விளைவிக்க முடியாது.
- உலகில் வெளிப்படையான விடயங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பளித்தல் நடைபெறும். மறுமையில் எண்ணங்கள் நோக்கத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்கப்படும்.