- சமூகங்களைப் பாதுகாப்பதில் நன்மையை ஏவி தீமையை தடுப்பதன் முக்கியத்தும் இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருத்தல்.
- உதாரணங்கள்; கூறுவது கற்பித்தல் முறைகளில் ஒன்றாகும். அது புலன்கள் உணரும் விதத்தில் கருத்துக்களை புத்திக்கு நெருக்கமாக ஆக்கிவிடுகிறது.
- வெளிப்படையான தீங்கொன்றை செய்வதை கண்டிக்காது இருப்பதானது மிகப்பெரும் கேடாகும். அது அனைவரின் மீதும் மிகப்பெரும் பாதிப்பைப் பேரழிவைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.
- இந்தப் பூமியில் தீமைசெய்வோரை அவர்களின்; அட்டகாசங்களில் விட்டுவிடுவதன் விளைவாக சமூகத்திற்கு நாசம்-அழிவு உண்டாகிறது.
- தவறான கையாள்கையும், நல்லெண்ணமும் செயல் சீர்பெற உதவாது.
- முஸ்லிம் சமூகத்தில் பொறுப்பு பொதுவானது. அது ஓரு குறிப்பிட்ட தனிநபரோடு மாத்திரம் சம்பந்தப்படாது.
- குறிப்பிட்ட சிலரின் பாவ காரியங்களை கண்டிக்காது விட்டால்; அதற்கான தண்டணையை அனைவரும் அனுபவிப்பவர்.
- நயவஞ்சகனைப் போன்று தீமைபுரிவோர் தங்களது தீமைகளை –சமூகத்திற்கு நன்மை செய்யும் வகையில் வெளிப்படுத்துவர்.