- பாவங்களை -தீமைகளை- தடுப்பதற்கான படித்தரங்களை விபரிப்பதில் அடிப்படையான ஒரு ஹதீஸாக இது உள்ளது.
- தீமைகளைத் தடுப்பதில் படிமுறைகளைப் பின்பற்றுமாறு இந்த ஹதீஸ் குறிப்பிடுவதுடன் இப்பணி ஒவ்வொரு மனிதனின் ஆற்றல் மற்றும் இயலுமைக்கு ஏற்பவே அமையும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.
- தீமையை தடுத்தல் மார்க்கத்தின் மகத்தான மற்றும் மிக முக்கிய ஒரு பகுதியாகும். ஆகையால் எவறும் இப்பொறுப்பிலிருந்து விலக முடியாது ஒவ்வொரு முஸ்லிமும் அவரவரவர் பெற்றிருக்கும் இயலுமைக்கேட்ப மேற்கொள்ளல் வேண்டும்.
- நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் ஈமானியப் பண்புகளில் ஒன்றாகும். ஈமான் கூடிக் குறையும் இயல்பைக் கொண்டதாகும்.
- குறிப்பிட்ட செயல் தீமை என்பதை அறிந்திருப்பது, தீமையைத் தடுத்தலுக்கான நிபந்தனையாகும்
- குறித்த ஒரு தீமையை தடுப்பதன் விளைவாக அதைவிடவும் மிகப்பெரும் தீமை உருவாகாது இருத்தல் வேண்டும் என்பது தீமையைத் தடுப்பதாற்கான இன்னொரு நிபந்தனையாகும்.
- தீமையைத் தடுப்பதற்கென சில ஒழுங்குகளும், நிபந்தனைகளும் உண்டு, அவற்றை ஒரு முஸ்லிம் கற்றுக்கொள்ளல் அவசியமாகும்.
- தீமையை தடுப்பதற்கு ஷரீஆ வழிமுறையும், அறிவும்,தெளிவும்அவசியமாகும்.
- மனதால்; தீமையை வெறுக்காதிருத்தல் ஈமானிய பலவீனமாகும்.