- அடக்கஸ்தளங்ளில் கப்ருகளின் மீதோ அல்லது அவற்றிற்கிடையிலோ அல்லது அதை நோக்கியோ, தொழுவது தடைசெய்யப்பட்டிருத்தல். ஆனால் நபிவழியில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று ஜனாஸாத் தொழுகை நடாத்த அனுமதியுண்டு.
- இணைவைப்பின் வாயில்களை அடைத்திட வேண்டும் என்பதற்காக அடக்கஸ்தளங்களில் தொழுவது தடைசெய்யப்பட்டிருத்தல்.
- இஸ்லாம் (கப்ருகள்)அடக்கஸ்தளங்கள் விடயத்தில் அளவு கடந்து செல்லுதல், அவமதித்தல் இரண்டையும் தடை செய்துள்ளது. எனவே இதில் எல்லை மீறுவதோ, அலட்சியமாக இருப்பதோ கூடாது.
- மரணித்தவரின் ஒரு எழும்பை முறிப்பது அவர் உயிரோடு இருக்கும் போது முறித்துவிடுவதைப் போன்றாகும் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கூற்றுக்கு ஏற்ப மரணத்தின் பின்னும் முஸ்லிமின் புனிதத்துவம் பேணப்படுதல்.