- அமல்களை-செயற்பாடுகளை- அல்லாஹ்வுக்கு இதயசுத்தியுடன் 'இஹ்லாஸாக' செய்வதும், முகஸ்துதியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதும் கடமையாகும்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்தின் மீது கொண்ட அதீத கருணை மற்றும் அவர்களை நேர்வழிப்படுத்திடவும், அவர்களுக்கு நலன் நாடுவதிலும் கொண்ட அக்கறையையும் இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றமை.
- முகஸ்துதி பற்றிய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பயமானது ஸஹாபாக்களின் மீதிருந்தது, அவர்களோ சான்றோர்களின் மிகப்பெரும் தலைவர்களாக இருந்தார்கள். இந்த வகையில் அவர்களுக்குப் பின் வந்தோர் பற்றி அதிகம் பயப்பட வேண்டிய தேவை உள்ளது.