- உண்மையில் சத்தியம் செய்வதன் மூலம் மகிமைப்படுத்துவது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரிய கடமையாகும். எனவே அல்லாஹ்வின் மீதும் அவனின் பெயர்கள் மற்றும் பண்புகள் மீது மாத்திரமே சத்தியம் செய்தல் வேண்டும்.
- நன்மையை ஏவி தீமையை தடுத்தல் பணியை மேற்கொள்வதில் ஸஹாபாக்களுக்கு இருந்த ஆர்வத்தை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுவதோடு குறிப்பாக குறிப்பிட்ட தீமையானது இணைவைத்தல் அல்லது இறைநிராகரிப்பு போன்ற விடயங்களில் இருந்தால் அதிக கவனம் செலுத்தியமையை காண முடிகிறது.