- ஓரிறைக் கொள்கை, இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாடு ஆகியவற்றில் கோலாரை ஏற்படுத்தக் கூடிய விடயங்களிலிருந்து பாதுகாத்தல்
- இணைவைத்தல் அடங்கிய மாந்திரீகம், தாயத்துக்கள், திவலா ஆகியவற்றைப் பயன்படுத்துவது ஹராமாக்கப்பட்டிருத்தல்.
- ஒரு மனிதன் இந்த மூன்று விடயங்களும் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் -சாதனங்கள்- என நம்புதல் சிறிய வகை இணைவைப்பாகும். காரணம் அவன் வழிமுறையில்லாத ஒரு விடயத்தை வழிமுறையாக ஆக்கியதாகும். என்றாலும் ஒருவன் குறிப்பிட்ட பொருளானது சுயமாக நன்மை தரக்கூடியது தீங்கை எற்படுத்தக்கூடியது என நம்பினால் அவன் பெரிய இணைவைப்பில் வீழ்ந்து விட்டான்.
- ஷிர்கான மற்றும் தடைசெய்யப்பட்ட காரண காரியங்களை செய்வதை விட்டும் எச்சரிக்கப்பட்டிருத்தல்.
- அனுமதிக்கப்பட்ட ஓதிப்பாத்தலை தவிர ஏனையவை அனைத்தும் ஷிர்க்காகும், அதனை செய்வது ஹராமாகும்.
- எப்போதும் உள்ளமானது அல்லாஹ்விடம் மாத்திரம் பற்றுக்கொண்டதாக இருப்பது அவசியமாகும். ஏனெனில் நலவோ கெடுதியோ அவன் ஒருவனிடம் மாத்திரமே உள்ளது, அவனுக்கு எந்த இணையும் கிடையாது, ஆக நலவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கொண்டுவர முடியாது, அதே போல் ஒரு தீமையை அல்லாஹ்வைத் தவிர வேறுயாராலும்; தடுக்கவும் முடியாது.
- அனுமதிக்கப்பட்ட ஓதிப்பார்த்தல் உள்ளடக்கியிருக்க வேண்டிய மூன்று நிபந்தனைகள் -வரையறைகள்- பின்வருமாறு :
- 1-இது அல்லாஹ்வின் அனுமதியின்றி பயனளிக்க முடியாத சாதாரண ஒரு சிகிச்சை முறை என்பதாகவே எண்ண வேண்டும். 2. இது அல்குர்ஆன், அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகள், நபியவர்கள் காட்டித்தந்த அனுமதிக்கப் பட்ட பிரார்த்தனைகள் மூலம் இருக்க வேண்டும். 3. அது புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் இருப்பதுடன் புரிந்து கொள்ளமுடியாத மாயையாகவோ தகடுகளை உள்ளடக்கியதாகவோ இருக்கக் கூடாது.