/ 'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வபிஹம்திஹி' ( பொருள்: அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அவை மன்னிக்கப்பட்டு விடும்'...

'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வபிஹம்திஹி' ( பொருள்: அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அவை மன்னிக்கப்பட்டு விடும்'...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வபிஹம்திஹி' ( பொருள்: அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அவை மன்னிக்கப்பட்டு விடும்'.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

யார் தினமும் 'ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' (அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்ற வார்த்தையை –தஸ்பீஹை- கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் அலையின் போதும் கடல் கொந்தளிக்கும் போதும் எழும் நுரையின் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அவை அழிக்கப்பட்டு மன்னிக்கப் பட்டுவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

Hadeeth benefits

  1. மேற்படி திக்ரைத் நாளொன்றில்; தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ, எவ்வாறு கூறினாலும் அவருக்கான இந்தக் கூலி கிடைக்கும்.
  2. தஸ்பீஹ் என்பது : அல்லாஹ்வை அனைத்து வகையான குறைகளைவிட்டும் தூய்மைப் படுத்துவதைக் குறிக்கும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே): என்பது நேசித்து ,போற்றப்டுவதற்குரிய பரிபூரண பண்பால் வர்ணிக்கப்படுதல்.
  3. இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள 'பாவம் மன்னிக்கப்படுதல்' என்பதன் கருத்து சிறிய பாவங்களைக் குறிக்கிறது. பெரும் பாவங்களுக்கு தவ்பா செய்வது அவசியமாகும்.