/ 'ஒரு முஸ்லிமை தைக்கும் முள் உட்பட, அவனுக்கு நேரிடும் சிரமம், நோய், கவலை, துக்கம், மனவேதனைகள் ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவனின் பாவத்தின் சிலதை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.'...

'ஒரு முஸ்லிமை தைக்கும் முள் உட்பட, அவனுக்கு நேரிடும் சிரமம், நோய், கவலை, துக்கம், மனவேதனைகள் ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவனின் பாவத்தின் சிலதை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா மற்றும் அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் கூறுகின்றார்கள்: 'ஒரு முஸ்லிமை தைக்கும் முள் உட்பட, அவனுக்கு நேரிடும் சிரமம், நோய், கவலை, துக்கம், மனவேதனைகள் ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவனின் பாவத்தின் சிலதை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.'
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோய்கள் கவலைகள் துன்பங்கள் சோதனைகள் பேரிடர்கள் கஷ்டங்கள் பயம் பசி –உடலில் தைக்கும் முள்ளால் ஏற்படும் வலி உட்பட- அனைத்தும் அவனின் பாவத்திற்கு பரிகாரமாகவும், அவனின் குற்றங்களை அழித்துவிடும் விடயங்களாகவும்; அவை உள்ளன என தெளிவுபடுத்துகிறார்கள்.

Hadeeth benefits

  1. இறைநம்பிக்கையாளர்களான தனது அடியார் களுக்கு அல்லாஹ் செரிந்துள்ள அருட்கொடை பற்றி விபரித்துள்ளதுடன் அவர்களுக்கு ஏற்படுகின்ற சாதாரண தீங்குகள் மூலம் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றமை குறித்த அவர்களுடனான இறை கருணை பற்றியும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றமை.
  2. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்கு ஏற்படுகின்ற சோதனைகளில் அல்லாஹ்விடத்தில் நன்மை எதிர்பார்ப்பதுடன் அவனின் அந்தஸ்த்துக்கள் உயர்த்தப்பட்டு பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக அவ்வாறான சிறிய மற்றும் பெரிய சோதனைகளில் அவன் பொறுமைக் காப்பதும் அவசியமாகும்.