'உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்'...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்'.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
விளக்கம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிம் வலது கையால் உணவருந்துமாறும் பானங்களை அருந்துமாறும் கட்டளையிடுவதோடு, ஷைத்தான் இடது கையால் உண்ணுகிறான் மற்றும் குடிக்கிறான் என்பதனால் இடது கையால் சாப்பிடுதல் மற்றும் குடித்தலை தடுத்துள்ளார்கள்.
Hadeeth benefits
இடது கையால் உண்ணுவதாலும் பருகுவதாலும் ஷைத்தானுக்கு ஒப்பாக நடப்பதை தடுத்திருத்தல்.
Share
Use the QR code to easily share the message of Islam with others