/ 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந...

'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந...

அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் (மண்ணறையையும்) தரையுடன் சமப்படுத்தாது விட்டு விடாதீர்!' என்று கூறினார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலல்லம் அவர்கள் உருவச்சிலைகளை எதனையும் விட்டுவைக்காது அதனை நீக்கி அழித்து விடுமாறு தனது தோழர்களை அனுப்பிவைப்பவர்களாக இருந்தார்கள். திம்ஸால் என்பது செதுக்கப்படட்ட, செதுக்கப்படாத சிலையைக் குறிக்கும். மேலும் தரைமட்டத்தை விட உயர்ந்திருக்கும் மண்ணறைகளை நிலமட்டத்துடன் சமப்படுத்தி விடுமாறும், அல்லது ஒரு சான் அளவு மட்டத்தில் உயர்ந்த கப்ருகளை வைக்குமாறும், கட்டப்பட்ட மண்ணறைகளை இடித்து விடுமாறும் வழிப் படுத்தி நபியவர்கள் தமது தோழர்களை பல பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தார்கள்.

Hadeeth benefits

  1. இணைவைப்பிற்கு வழிவகுக்கும் என்பதினால் உயிருள்ளவற்றிற்கு உருவச் சிலைகள் அமைப்பது ஹராமாக்கப்பற்றிருத்தல்.
  2. அதிகாரம், சக்தி உள்ளவர்கள் தீமைகளைக் கையினால் தடுப்பது மார்க்கத்தில் உள்ள விடயமாகும்.
  3. ஜாஹிலிய்யாக் கால அடையாளங்களைக்காட்டும் உருவப் படங்கள் உருவச்சிலைகள் கப்ரின் மீது அமைக்கப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றை நீக்குவதில் நபியவர்கள் கொண்டிருந்த ஆர்வம்.
  4. குறிப்பு : 1- அனைவரும் இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் இந்த சிலைகளின் தேவை காணப்படாமை.
  5. 2-இஸ்லாத்தை தழுவிய விக்கிரக வணங்கிகளான அரபுகள் மீண்டும் பழைய நினைவுகளை மீட்டு இணைவைப்பின் பால் மீண்டு செல்லாது தடுப்பதற்காகவே இதனை அவர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.