- ஈமானின் மூலம் மாத்திரமே சுவர்க்கம் நுழையலாம்.
- தான் விரும்புவதை தனது சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது ஈமானின் பூரணத்துவத்தைக் காட்டும் விடயங்களில் ஒன்றாகும்.
- ஸலாத்தைப் பரப்புதல் அதனை முஸ்லிம்களுக்கு கூறுவது வரவேற்கத்தக்க விடயமாகும்.ஏனெனில் அதனுள் நேசமும், மக்களுக்கு பாதுகாப்பும் உண்டு.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கூற்றில் ' பைனகும்' என்ற வார்த்தையானது, ஸலாம் முஸ்லிம்களுக்கு மாத்திரமே கூறப்படும் என்பதையே காட்டுகிறது.
- ஸலாம் கூறுவதினால் உறவு முறிப்பு, பகை , புறக்கணிப்பு போன்ற விடயங்கள் நீங்கிவிடுகிறது.
- முஸ்லிம்களுக்கு மத்தியில் நேசம் கொள்வதன் அவசியம் பற்றி விளக்கியிருத்தல், அத்துடன் ஈமானின் பரிபூரணத்திற்கு சான்றாக அமைந்து விடும்.
- இந்த ஹதீஸின் இறுதியில் ஸலாம் சொல்லும் முறை அல்லது அதன் முழு அறபுவடிவம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹு என்பதாகும். ஆனால் ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினாலும் அதுவும் போதுமானதாகும்.