- இணைவைப்பிட்கு வழிவகுக்கும்,வழிகளை தடுப்பதற்காகவும், கப்ருகள் மீது பள்ளிகளைக் கட்டுவதோ, அல்லது தொழுவதோ பள்ளிகளுக்குள்ளே மரணித்தவர்களை அடக்கம் செய்வதோ கூடாது. இவை ஹராமான விடயங்களாகும்.
- கப்ருகள் மீது பள்ளிகளைக் கட்டுவதும், பள்ளிகளிலே உருவச் சிலைகள் வைப்பதும் யூத, கிறிஸ்தவர்களுடைய வழிமுறையாகும். இதனைச் செய்தவர்கள் அவர்களுக்கு ஒப்பாகிவிடுகிறார்கள்
- உயிருள்ள பொருட்களின் உருவச் சிலைகளை எடுப்பது ஹராமாகும்.
- கப்ரின் மீது பள்ளி கட்டி, அதில் உருவச் சிலைகளை படைப்பவர்கள்; அல்லாஹ்வின் படைப்பினங்களில் மிகவும் தீயவர்களாவர்.
- இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் அனைத்து வழிகளையும் தடுப்பதன் மூலம் தவ்ஹீதின் புனிதத்துவத்தை பாதிக்கும் விடயங்களிருந்து இஸ்லாமிய ஷரீஆ, தவ்ஹீதை பரிபூரணமாக பாதுகாத்தல்.
- சான்றோர் விடயத்தில் எல்லைமீறிச்செல்வதானது இணைவைப்பில் வீழ்வதற்கு காரணமாக அமையும் என்பதினால் அது தடுக்கப்பட்டிருத்தல்.