- கோபம் கொள்வது மற்றும் அதன் காரணிகளை விட்டும் எச்சரிக்கப்பட்டிருத்தல். ஏனெனில் அதுதான் அனைத்து கெடுதிகளுக்கும் மூலமாகும். அதிலிருந்து தவிர்ந்து கொள்வதே அனைத்து நலவுகளுக்குமான அடிப்படையாகும்.
- அல்லாஹ்வுக்காக கோபம் கொள்ளுதல் என்பது கோபத்தில் விரும்பத்தக்க கோபமாகும்.அல்லாஹ்வுடைய புனிதங்கள்-தடைகள்- மீறப்படும்போது கோபம் கொள்ளுதல் இதற்கான உதாரணமாகும்.
- செவிமடுப்பவர் புரிந்துகொள்ளவும் அதன் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ளவும் தேவை –அவசியம் கருதி ஒரு விடயத்தை பல தடவைகள் கூறுதல்.
- அறிஞரிடம் அறிவுரை கோருவதன் சிறப்பு இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை.