- நீதம் செலுத்துவதன் சிறப்பும், அதற்கான ஊக்குவிப்பும் இந்நபிமொழியில் உள்ளது.
- நீதி என்பது பொதுவானது மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் மக்களிடையே உள்ள தீர்ப்புகள், மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான நீதி மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.
- மறுமையில் நீதம் செலுத்துவோரின் தரம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
- மறுமையில் தத்தமது நற்செயல்களுக்கு ஏற்ப விசுவாசிகளின் தரங்களில் ஏற்றத் தாழ்வுண்டு.
- பிரச்சார வழிமுறையில் பின்பற்ற வேண்டிய உத்திகளுள் ஆர்வமூட்டல் என்பது ஒரு வழிமுறையாகும். ஏனெனில் அது அழைக்கப் படுபவரை வணக்கத்தில் ஈடுபட ஆர்வமூட்டுகிறது.