/ 'நற்பண்புள்ள முஃமினான அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்பாளி, மற்றும் இரவில் நின்று வணங்குவோனின் அந்தஸ்த்தை அடைந்து கொள்வான்'...

'நற்பண்புள்ள முஃமினான அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்பாளி, மற்றும் இரவில் நின்று வணங்குவோனின் அந்தஸ்த்தை அடைந்து கொள்வான்'...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'நற்பண்புள்ள முஃமினான அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்பாளி, மற்றும் இரவில் நின்று வணங்குவோனின் அந்தஸ்த்தை அடைந்து கொள்வான்'.

விளக்கம்

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நற்பண்புள்ள ஒரு அடியான் தனது நற்பண்பின் மூலம் பகல் முழுதும் தொடரந்தும் நோன்பு நோற்று, இரவில் நின்று வணங்கும் ஒரு அடியானின் அந்தஸ்தையும் பெற்றுக் கொள்கிறான். பிறருக்கு நல்லது செய்தல், அழகிய வார்த்தை பேசுதல், முகமலர்ச்சியுடன் இருத்தல், மனிதர்களுக்கு தொந்தரவு செய்வதை தடுத்தல், அவர்களிடமிருந்து எதிர்ப்படும் சிரமங்களை தாங்கிக்கொள்ளல் போன்றவை நற்பண்பின் அடிப்படையாகும்.

Hadeeth benefits

  1. இஸ்லாம் நற்பண்புகளை நெறிப்படுத்துவதிலும் அதனைப் பரிபூரணப்படுத்துவதிலும் அதிக கரிசணை காட்டியிருத்தல்.
  2. இந்த ஹதீஸ் நற்பண்புகளின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது. அதாவது நற்பண்புகள் மூலம் அடியான் நோன்பாளியினதும் இரவில் நின்று வணங்குவோனினதும் அந்தஸ்தையும் அடைந்து கொள்கிறான்.
  3. பகலில் நோன்பு நோற்பதும் இரவில் நின்று வணங்குவதும் மனதுக்கு சிரமமான மகத்தான இரு பெருங்காரியங்களாகும். ஆகவே நற்பண்புள்ள ஒரு அடியான் தன்னை நல்ல பண்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் மேற்படி இரண்டு வணக்கங்களின் அந்தஸ்த்தை அடைந்து கொள்கிறான்.