- அல்லாஹ்வை வணங்குவதிலிருந்து வீடுகளை பால்படுத்துவது தடுக்கப்பட்டிருத்தல்.
- நபியவர்களின் கப்ரை தரிசிப்பதை நோக்காகக் கொண்டு பயணம் செய்வது இங்கு தடுக்கப் பட்டிருத்தல். ஏனெனில் அவர்கள், தன்மீது ஸலவாத் சொல்லுமாறு கட்டளையிட்டதோடு அது தன்னை வந்தடைவதாகவும் அறிவித்துள்ளார்கள். ஆனால் நபியவர்களின் பள்ளியை தரிசிக்கும் நோக்கிலும் அதில் தொழும் எண்ணத்திலும் பயணம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட முறையில் அடிக்கடி நபியவர்களின் கப்ரை தரிசிப்பதன் மூலம் அதனை விழாக் கொண்டாடும் தளமாக எடுத்துக் கொள்வது ஹராமாக்கப்பட்டிருத்தல்.
- எல்லா காலங்களிலும் இடங்களிலும் ஸலவாத்தும் ஸலாமும் கூறுவதற்கான ஷரீஆ அங்கீகாரமானது நபியவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மிகப்பெரும் மதிப்பாகும்.
- மண்ணறைகளுக்குப் பக்கத்தில் தொழுவது தடை என்ற விடயம் ஸஹாபாக்களிடத்தில் ஆழமாகபதிந்த விடயமாக காணப்பட்டது. இதனால் வீடுகளை தொழாத மண்ணறைகளாக ஆக்க வேண்டாம் எனத் தடுத்தார்கள்.