- நபிமார்கள் மற்றும் சான்றோரின் மண்ணறைகள் விடயத்தில் இஸ்லாமிய ஷரீஆ வரம்புகளை மீறிச் செல்வது, அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுவதாக ஆகிவிடும். ஆகவே இணைவைத்தலுக்கு இட்டுச்செல்லும் அனைத்து வழிமுறைகளிலிருந்தும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
- மகிமைப் படுத்துவதற்காகவும், அவ்விடங்களில் வழிபடுவதற்காகவும் மண்ணறைகளை நாடிச் செல்வது தடுக்கப்பட்ட விடயமாகும். அதிலிருப்பவர் எந்தளவு அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் சரியே.
- அடக்கஸ்தளங்கள் மீது பள்ளிகள் கட்டுவது ஹராமாகும்.
- பள்ளியாகக் கட்டப்படாவிட்டாலும் அடக்கஸ்தளங்களில் தொழுவது ஹராமாகும். ஆனால் தொழுகை நடாத்தப்படாத ஜனாஸாவிற்கு தொழுகை நடத்த அனுமதியுண்டு.