/ யார் எமக்கெதிராக ஆயுதமேந்துகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர்'

யார் எமக்கெதிராக ஆயுதமேந்துகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: யார் எமக்கெதிராக ஆயுதமேந்துகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர்'
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

முஸ்லிம்களை அச்சுருத்தி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காக முஸ்லிம்களுக்கெதிராக ஆயுதமேந்துவதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள். யார் ஒருவர் எவ்வித நியாயமான காரணங்கள் ஏதுமின்றி இவ்வாறு செய்கிறானோ அவன் பெரும்பாவங்களில் ஒன்றை செய்தவனாவான். அவன் இந்த எச்சரிக்கைக்கு தகுதியானவனாக மாறி விடுகிறான்.

Hadeeth benefits

  1. தனது சகோதர முஸ்லிமுடன் போராடுதல் சண்டை சச்சரவில் ஈடுபடுபடுதலுக்கான கடுமையான எச்சரிக்கை இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருத்தல்.
  2. இப்பூமியில் நிகழும் மிகப்பெரும் சீர்கேடு மற்றும் தீமை முஸ்லிம்களுக்கெதிராக ஆயுதமேந்துவதும் கொலை செய்வதுமாகும்.
  3. ஹதீஸில் குறிப்பிடப்பட்ட எச்சரிக்கையானது அத்து மீறி நடக்கும் குழப்பவாதிகள், மற்றும் வரம்பு மீறி செயற்படுவோர் போன்றோருக்கு எதிராக, நியாயமான காரணத்தினடிப்படையில் ஆயுதமேந்தி போராடுவதை உள்ளடக்கமாட்டாது.
  4. வேடிக்கைக்காகக் கூட முஸ்லிம்களை ஆயுதங்கள் போன்றவற்றால் அச்சுறுத்துவது ஹராமாகும்.