என் சமூகத்தினர் அனைவருக்கும் மன்னிப்பளிக்கப்டும். எனினும் குற்றத்தை அம்பலப்படுத்தியவர்களைத் தவிர....
என் சமூகத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவர்.எனினும் தன் குற்றத்தை அம்பலப்படுத்தியவர்களைத் தவிர.இரவு காலத்தில் பாவ காரியம் ஒன்றைச் செய்த மனிதனின் தவறை அல்லாஹ் மறைத்து வைத்த போது அவன் காலையில் எழுந்ததும்,:இன்னவனே நான் நேற்றிரவு இப்படியெல்லாம் செய்தேன்,என்று அல்லாஹ் மறைத்து வைத்த தன்னுடைய தவறை அவன் காலையில் எழுந்ததும் இப்படி வெளிப்படுத்துவானாகில்,அது தன் தவறை அம்பலப்படுத்துதலாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுராரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
விளக்கம்
அல்லாஹ் முஸ்லிம்கள் யாவரினதும் குற்றங்களை மன்னிப்பான்.ஆனால் எவன் இரவு காலத்தில் பாவமான காரியத்தில் ஈடுபட்டிருந்து அதனை அல்லாஹ் மறைத்து வைத்திருந்தும் அவன் காலையில் எழுந்ததும் அதனை அவனே மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவானாகில் அவனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
Share
Use the QR code to easily share the message of Islam with others