- உறவைத் துண்டிப்பது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
- உறவுகளை சேர்ந்து நடப்பது என்பது வழக்காறுகளைப் பொறுத்தே அமையும். இது கால இட மனிதர்களின் வித்தியாசத்திற்கேட்ப வேறுபடும்.
- உறவுகளை சேர்ந்து நடப்பதென்பது அவர்களை தரிசித்தல், தர்மம் வழங்குதல், அவர்களுக்கு உபகாரம் செய்தல் போன்றவைகளுடன், நோயாளியை சுகம் விசாரிக்கச் செல்லுதல், அவர்களுக்கு நன்மையான விடயங்களை ஏவுதல், தீமையான விடயங்களை தடுத்தல் போன்ற விடயங்களை குறிக்கிறது.
- உறவுகளை துண்டிப்பது, உறவுகளில் மிகவும் நெருங்கிய உறவுகளுடன் (உம் : தாய் தந்தை சகோதரர் சகோதரி) இருப்பின் அதற்குரிய பாவமும் கடுமையானதாக அமைந்து விடும்.